இந்தியாவில் வாக்காளர்கள் எண்ணிக்கை 81.4 கோடி: 5 ஆண்டுகளில் 10 கோடி அதிகரிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 81.4 கோடி என்றும் கடந்த தேர்தலைவிட 10 கோடி வாக்காளர்கள் இம்முறை அதிகம் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் லோக்சபா தேர்தல் அட்டவணையை வெளியிட்டு சம்பத் கூறியதாவது:
தற்போதைய லோக்சபா தேர்தல் கால அட்டவணை பல்வேறு காரணிகளை ஆராய்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்த வாக்காளர்கள் 81.4 கோடி பேர் உள்ளனர்.

கடந்த தேர்தலைவிட இம்முறை 10 கோடி வாக்காளர்கள் அதிகம். நாடு முழுவதும் 9 லட்சத்து 30 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த முறையை இம்முறை 12% இது அதிகம்.
லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு இயந்திரங்களில் நோட்டா பட்டன் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க நாடு முழுவதும் 9-ந் தேதி சிறப்பு முகாம் நடத்தப்படும். இம்முறை புகைப்படம் ஒட்டிய பூத் சிலிப்புகள் வழங்கப்படும். இந்த தேர்தலில் வேட்பாளர்களின் செலவுகள் தீவிரமாக கண்காணிக்கப்படும்.
தேர்தலை அச்சமின்றி நேர்மையாக தேர்தல் அதிகாரிகள் நடத்த வேண்டும்.
இவ்வாறு தேர்தல் ஆணையர் சம்பத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications