ம.பி.யில் தொடரும் துயரம்: கோவில் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் துடி துடித்து பலி!
போபால்: மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் கோவில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்து 9 குழந்தைகள் துடி துடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தின் சாகர் மாவட்டம் சாஹ்பூர் என்ற இடத்தில் உள்ள ஹர்தவுல் பாபா கோவிலின் சுவர் இடிந்து விழுந்து இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது. கோவில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கி பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாக குவிந்திருந்தனர். அப்போது திடீரென கோவில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

கோவில் சுவர் இடிந்து விழுந்த இடிபாடுகளில் சிக்கியவர்கள் அலறித்துடித்தனர். இந்த இடிபாடுகளில் சிக்கி 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் பாழடைந்த சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் பலியாகினர். அந்த துயரத்தின் சுவடு மறைவதற்குள் 9 குழந்தைகளை கோவில் சுவர் இடிந்து விழுந்து காவு வாங்கி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து தொடர்பாக சாகர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஆர்யா கூறுகையில், கோவில் வளாகத்தில் உள்ள டெண்ட்டில் குழந்தைகள் அமர்ந்திருந்தனர். அப்போது குழந்தைகள் மீது சுவர் இடிந்து விழுந்தது. கனமழை தொடர்ந்து பெய்ததால் சுவர் இடிந்து விழுந்தது. இன்று காலை 8.30 மணிக்கு இந்த துயர சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் மொத்தம் 9 குழந்தைகள் பலியாகி உள்ளனர் என்றார்.
இத்துயர சம்பவத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், உயிரிழந்த 9 குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ1 லட்சம் வழங்கப்படும் எனவும் மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications