புற்றுநோயால் பாதிக்கப்பபட்ட 13 வயது சிறுமி 8 ஆசிரியர்களால் பலாத்காரம்.. ராஜஸ்தானில் பயங்கரம்
ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமி ஒருவர் 8 ஆசிரியர்களால் ஓராண்டாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி ஒருவர் 8 ஆசிரியர்களால் ஓராண்டாக பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானரின் நோகாவை சேர்ந்த மாணவி 2015-ம் ஆண்டு தனியார் பள்ளியில் 8 ஆசிரியர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். பள்ளி நேரம் முடிந்த பின்னர் சிறப்பு வகுப்பு உள்ளதாக சொல்லி மாணவியை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.
இதனை அவர்கள் வீடியோவும் எடுத்து உள்ளனர். வீடியோவை காட்டி சிறுமியை மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளனர்.

கர்ப்பத்தை கலைத்த கொடூரர்கள்
இதனால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். மருந்துகளை வாங்கிக்கொடுத்து சிறுமியின் கர்ப்பத்தையும் அவர்கள் கலைத்துள்ளனர்.

பெற்றோரையும் மிரட்டிய ஆசிரியர்கள்
இந்த விவகாரம் கடந்த 2016ஆம் ஆண்டுதான் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அப்போது 8 ஆசிரியர்களும் சிறுமியின் பெற்றோரை மிரட்டியுள்ளனர். மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமியை பார்க்கவும் அவர்கள் அனுமதிக்கவில்லை எனத் தெரிகிறது. ஊருக்கு தெரிந்தால் கேவலமாக பேசுவார்கள் என்பதால் சிறுமியின் பெற்றோர் புகார் அளக்காமல் இருந்து வந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி
இந்நிலையில் ஆசிரியர்களின் கொடுமை அதிகரிக்கவே பொறுத்துக்கொள்ள முடியாத அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த ஓராண்டாக ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. அவருக்கு மருத்துவமனையில் தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

முதல்வர் விசாரணையை கண்காணிக்கிறார்
ராஜஸ்தான் மாநில மந்திரி ராஜேந்திர ரத்தோர் பேசுகையில், "இது மிகவும் அதிர்ச்சிகரமான சமபவம். மிகவும் வருத்தமானது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும், முதல்-மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியா விசாரணையை கண்காணித்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications