கேன்சர் நோயாளிகளுக்கு விக்.. தலையை மொட்டை அடித்து தானம் செய்த பெண் போலீஸ் அதிகாரி

Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: கேன்சர் நோயாளிகளுக்கு விக் செய்ய தலையை மொட்டை அடித்த பெண் போலீஸ் அதிகாரி தனது முடியை தானம் செய்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேன்சர் நோயாளிகளுக்கு ரேடியேஷன் தெரபி, கீமோதெரபி ஆகிய சிகிச்சைகளை கொடுக்கும் போது அதன் உஷ்ணத்தால் முடி கொட்டுவது வழக்கம். அதிலும் கேன்சர் முற்றி போகும் நோயாளிகளுக்கு தினசரி ஒரு பேக்கேஜ் போல் ரேடியேஷன் தெரபி கொடுக்கப்படும்.

A civil police officer from Thirussur tonsures her head to donate for cancer patients

அப்போது அவர்களது முடி மொத்தம் கொட்டி ஆங்காங்கே மட்டும் இருக்கும். இதனால் வேதனையடையும் பெண் நோயாளிகள் மொட்டை அடித்து கொள்வது வழக்கம். மேலும் சிலர் விக் எனப்படும் பொய் முடியை வைத்துக் கொள்வர்.

அந்த விக்கை செய்ய ஏராளமானோர் தங்கள் முடியை தானம் செய்வர். சிலர் ஒரு ஜான் அளவோ ஒரு முழம்அளவோ முடியை வெட்டி கொடுப்பர். ஒரு சிலர் மொட்டை அடித்து தனது முழு முடியையும் கொடுப்பர்.

அந்த வகையில் திருச்சூரை சேர்ந்த போலீஸ் அதிகாரி அபர்ணா லவக்குமார். 44 வயதாகும் இவர் தனது முடியை மொட்டை அடித்து அதை கேன்சர் நோயாளிகளுக்கு தானமாக வழங்கியுள்ளார். அவர் முடியுடன் இருக்கும் படமும் மொட்டை அடித்த பின்னர் எடுத்த படமும் தற்போது வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+