கவனிக்கப்படாத ஒரு கடற்படை டைவிங் வீரரின் அனுபவம்
கொச்சி: கடற்படையில் டைவர்கள் எனப்படும் நீர்மூழ்கி வீரர்கள் பங்களிப்பு வெளியே தெரியாமலே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒருவர்தான், தென் கடற்படை கமாண்ட் ஹரிதாஸ் குன்டு.
33 வயதான ஹரிதாஸ் குன்டு, ஒன்இந்தியாவிடம் தனது அனுபவங்களை இப்படி கூறுகிறார்: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நான், சிறு வயதிலேயே எங்கள் ஊரான கல்யண்கார் பகுதியிலுள்ள, குளத்தில், நீச்சல் அடித்தும், மீன் பிடித்தும் அனுபவம் கொண்டவன்.

கடந்த 14 வருடங்களாக கடற்படையில் பணியாற்றி வருகிறேன். 12வது படித்து முடித்ததும், பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று பணிக்கு சேர்ந்தேன்.
அதுவரை, ஊரில் எங்கள் குடும்ப பிசினசான இனிப்பு தயாரிப்பில், தந்தைக்கு உதவிகரமாக இருந்தேன். ரசகுல்லா மற்றும் குலோப்ஜாமூன் எனக்கு பிடித்த இனிப்பு.
கடற்படையில், டைவிங் செய்வோர் மிகுந்த உடல் வலிமையோடு இருக்க வேண்டும். மனதும் உறுதியாக இருக்க வேண்டும். நீரில் மூழ்குவோரை காப்பாற்றுவோரை செல்லும்போது மிகுந்த விழிப்புணர்வோடு இருப்பது அவசியம். பல வகைகளில் மூளையை ரெடியாக வைத்து இருக்க வேண்டும்.
2009ல், தேக்கடியில் படகு கவிழ்ந்த விபத்தில், 45 பேர் உயிரிழந்தனர். அப்போது, மீட்பு குழுவில் நானும் இணைந்து செயல்பட்டேன். சடலங்கள் ஏதும் இல்லை என்று முடிவாகும்வரை ஆற்றில் தேடி பார்த்த பிறகே மீட்பு பணியை முடித்தோம். இவ்வாறு ஹரிதாஸ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications