திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையல் தோண்டும் பணிகள்... முன்னாள் அர்ச்சகர் புகாரால் பரபரப்பு
திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையலுக்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றதாக முன்னாள் அர்ச்சகர் புகார் தெரிவித்துள்ளார்.
திருப்பதி: திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் புதையல் எடுப்பதற்காக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்றதாக முன்னாள் கோயில் அர்ச்சகர் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ,விஷேச, விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருவது வழக்கம். இந்த கோயிலில் தினந்தோறும் அர்ச்சனைக்கு வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் மலர்களாலும் வாசனை திரவியத்தாலும் பூஜிப்பதை அறிந்த பக்தர்கள் மெய்சிலிர்த்தனர்.
அதுபோல் திருப்பதி வெங்கடாஜலபதி கோயில் மலையில் இருப்பதால் அங்கு கடும் குளிர் நிலவும். எனினும் வெங்கடாஜலபதியின் உடல் மிகவும் வெப்பமாகவும் அவரது மேல் சாத்தப்பட்ட பூக்களை நீக்கிவிட்டு பார்த்தால் அவருக்கு வியர்வை சுரப்பதாகவும் தகவல்கள் கூறப்படுகின்றன.

ஆச்சரியம்
திருப்பதியில் கோயிலில் உள்ள நகைகள் இன்னும் கணக்கில்லடங்காதவையாகவே உள்ளன என்றும் ஒரு தகவல் உலவுகிறது. இது போல் திருப்பதி என்றாலே அங்கு மர்மம், மெய்சிலிர்ப்பு, ஆச்சரியம் என்றாகிவிட்டது.

சுரங்கம்
இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மீது முன்னாள் அர்ச்சகர் ஒரு புகாரை அளித்துள்ளார். அதில் திருப்பதி கோயில் மடப்பள்ளியில் சுரங்கம் தோண்டுவதாக புகார் அளித்தார்.

புனரமைப்பு பணி
இதை திருப்பதி தேவஸ்தானம் மறுத்துள்ளது. இது குறித்து தேவஸ்தான செயல் அலுவலர் ஸ்ரீனிவாச ராஜு கூறுகையில், மடப்பள்ளியில் புனரமைப்பு பணிகள் மட்டுமே நடக்கிறது.

தவறானது
மடப்பள்ளியில் பிரசாதம் செய்யும் போது அந்த வெப்பத்தை மடப்பள்ளியின் சுவர்கள் தாங்கக் கூடிய அளவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது. புதையல் தோண்டுவதற்கான முயற்சி நடந்தது என்பதெல்லாம் தவறு. அந்த பணிகளும் ஆகம ஆலோசகர்கள் அனுமதியுடன் நடைபெற்றது. அதுபோல் கோயிலில் நகைகள் காணாமல் போனதாக வந்த புகார்களும் தவறானது என்றார் ஸ்ரீனிவாச ராஜு.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications