படியிலிருந்து விழுந்த பெண்.. கடைசி நொடியில் கை கொடுத்த டீ- சர்ட்.. மும்பை ரயிலில் பரபரப்பு- வீடியோ
மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் கவனக்குறைவு காரணமாக ரயிலில் இருந்து விழுந்துள்ளார்.
Recommended Video
மும்பை: மும்பை மின்சார ரயிலில் பெண் ஒருவர் கவனக்குறைவு காரணமாக ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் இவர் ஆச்சர்யமாக காப்பாற்றப்பட்டார்.
மும்பையின் காட்கோபர் மற்றும் விக்ரோலி ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.
இது பார்க்கவே பதட்டம் அடைய வைக்கும் வகையில் உள்ளது. இந்த வீடியோவில் உள்ள ஆணுக்கு எல்லோரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
[ தமிழகத்தை தொடர்ந்து பெங்களூரிலும் மழை.. மக்கள் மகிழ்ச்சி ]
என்ன நடந்தது
அந்த பெண்ணுக்கு வயது 19 என்று கூறப்படுகிறது. அவரின் பெயர் வெளியிடப்படவில்லை. கல்லூரி மாணவியான அவர் மும்பையின் காட்கோபர் ரயில் நிலையத்தில் இருந்து விக்ரோலி ரயில் நிலையம் வரை சென்றுள்ளார். அவர் படிக்கட்டில் நின்றபடி போனில் பேசிக்கொண்டே சென்று இருக்கிறார்.
தவறி விழுந்தார்
இந்த நிலையில் ரயில் படிக்கு வெளியே எட்டி பார்க்க முயன்றுள்ளார். அப்போது திடீர் என்று எதிர்புறத்தில் ரயில் ஒன்று வந்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த அவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். எதிர்புற ரயிலில் அடிப்பட கூடாது என்று பின்வாங்கிய அவர் அப்படியே கீழே விழுந்துள்ளார்.
|
நொடியில் காப்பாற்றினார்
ஆனால் அருகில் இருந்த நபர் அந்த பெண்ணை அப்படியே பிடித்து இருக்கிறார். பெண்ணின் ஆடையை பிடித்து இழுத்துள்ளார். இதற்கு அடுத்து கூட இருந்த நபரும் அவருக்கு உதவ வந்துள்ளார். இரண்டு பேரும் சேர்ந்து அந்த பெண்ணை காப்பாற்றி இருக்கிறார்கள்.
சிறிய காயம்
இது வீடியோவாக வெளியாகி உள்ளது. அந்த பெண்ணுக்கு கைகளில் மட்டும் காயம் ஏற்பட்டு இருக்கிறது. அந்த பெண் அதன்பின் முதலுதவி அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டு இருக்கிறார். இந்த வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.