தியேட்டருக்கு கூட்டிச் சென்று வன்புணர்வு.. நண்பர்களே கயவர்களாக மாறிய கொடூரம்!

உத்தர பிரதேசத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தியேட்டருக்கு கூட்டிச் சென்று வன்புணர்வு.. நண்பர்களே கயவர்களாக மாறிய கொடூரம்!- வீடியோ

    மீரட்: உத்தர பிரதேசத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மீரட் நகரத்தில் இருக்கும் தியேட்டரில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

    பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட அந்த சிறுமிக்கு 16 வயது கூட நிரம்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அந்த சிறுமியின் நண்பர்களே இந்த கொடூரமான செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த செயலை செய்வதற்காக அந்த சிறுமியின் நண்பர்கள் பல நாட்களாக திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    தியேட்டருக்கு சென்றனர்

    தியேட்டருக்கு சென்றனர்

    டெல்லியின் மீரட் நகரத்தில் வசிக்கும் அந்த 16 வயது சிறுமி தனது நண்பர் ஒருவருடன் அங்கு இருக்கும் தியேட்டர் ஒன்றிற்கு சென்று இருக்கிறார். படம் பார்பபதற்கு முன்பு அவர்கள் கடைகளுக்கு சென்று ஷாப்பிங் செய்து இருக்கிறார்கள். மேலும் காலை உணவு சாப்பிட செல்லும் போது அந்த பையனின் நண்பன் ஒருவனும் அவர்களுடன் இணைந்து இருக்கிறான். இவர்கள் மூவருமாக சென்று பின் படம் பார்க்க முடிவு செய்துள்ளனர்.

    வன்புணர்வு

    வன்புணர்வு

    தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டு இருந்த போது அந்த சிறுமியை இருவரும் திடீர் என்று வெளியே அழைத்து சென்றுள்ளனர். இந்த நிலையில் தியேட்டர் மாடியில் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும் இருவரும் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் அதே இடத்தில் மயங்கி விழுந்து இருக்கிறார். பின் அந்த சிறுமி மயக்கம் தெளியும் வரை அவர்கள் அங்கேயே காத்து இருந்துள்ளனர்.

    தெரியாத இடம்

    தெரியாத இடம்

    அந்த சிறுமிக்கு மயக்கம் தெளிந்த உடன் பைக்கில் வைத்து அந்த இருவரும் அழைத்து சென்றுள்ளனர். அந்த சிறுமியை உத்தர பிரதேசத்தின் தெரியாத இடம் ஒன்றில் இறக்கிவிட்டுவிட்டு சென்றுள்ளனர். இதனால் அந்த பெண் வீட்டிற்கு எப்படி செல்வது என தெரியாமல் அந்த நாள் முழுக்க கஷ்டப்பட்டு இருக்கிறார். பின் மீண்டும் அந்த சிறுமி மீரட் நகரத்திற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளார்.

    விசாரணை

    விசாரணை

    இந்த தகவல் தெரிந்த அந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து இரண்டு பேர் இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் அந்த இரண்டு பேரும் இதற்காக கடந்த மூன்று மாதங்களாக திட்டமிட்டு வந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+