மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
ஆந்திராவில் மதுவை ஊற்றிக்கொடுத்து சக மாணவியை பலாத்காரம் செய்து மாணவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: ஆந்திராவில் மதுவை ஊற்றிக்கொடுத்து சக மாணவியை பலாத்காரம் செய்து மாணவர்கள் வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் அகிரிபள்ளியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவி சகமாணவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உடன் படிக்கும் மாணவருக்கு பிறந்த நாள் என கூறி ஹோட்டலில் பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் அந்த மாணவியும் பங்கேற்றுள்ளார்.

மதுவுடன் பிறந்தநாள் பார்ட்டி
நேரம் செல்ல செல்ல மதுவுடன் ஆட்டம் பாட்டம் என கலைகட்டியது பார்ட்டி. அப்போது மாணவியையும் சக மாணவர்கள் மதுக்குடிக்க தூண்டியுள்ளனர். மாணவி மறுத்த போதும் வற்புறுத்தி மதுவை ஊற்றிக்கொடுத்துள்ளனர்.

மாறி மாறி வீடியோ
மதுபோதை தலைக்கேறிய நிலையில் வகுப்பு நண்பர்களான சிவா ரெட்டியும், கிருஷ்ண வம்சியும் போதையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இருவரும் மாணவியை பலாத்காரம் செய்ததை மாறி மாறி வீடியோ எடுத்துள்ளனர்.

மற்றொரு மாணவன்
வீடியோவை வைத்து மிரட்டியே அந்த மாணவியை பலமுறை அவர்கள் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு படிப்பு முடிந்த நிலையில் தன்னுடன் படித்த மற்றொரு மாணவனான பிரவீன் அந்த மாணவியை தொடர்பு கொண்டு பலாத்கார வீடியோ தன்னிடம் உள்ளதாக கூறியுள்ளார்.

ஆசைக்கு இணங்க வேண்டும்
மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டாம் என்றால் தன்னுடைய ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டு நிலைகுலைந்தார் அந்த மாணவி.

போலீஸில் புகார்
இதனால் கடந்த 2 மாதமாக கவலையுடன் இருந்த மாணவியை பெற்றோர் விசாரித்ததில் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோருடன் சென்று போலீஸில் அவர் புகார் அளித்தார். இதனடிப்படையில் பிரவீனை கைது செய்த போலீசார், மற்ற 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications