ரயிலின் முன் பாய்ந்த பெண்… மூன்று மகள்களுடன் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

லக்னோ: தன்னுடைய மகள்களையும் கூட்டிக் கொண்டு ரயிலின் முன் பாய்ந்த உத்ரபிரதேசத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார்.

உத்தரபிரதேசத்தின் ஷஹரன்பூர் மாவட்டத்தில் மகள்களுடன் ரெயில் முன் பாய்ந்த பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள டப்ரி ரெயில் நிலையத்தின் அருகேயுள்ள தண்டவாளத்தில் வேகமாக வந்த உஜ்ஜைன் எக்ஸ்பிரஸ் ரெயிலின் முன்பு நேற்று 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஒருவர் தனது 3 மகள்களுடன் பாய்ந்தார்.

ரயில் மோதியதில் உடல் சிதைந்து தாயும் ,2 மகள்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிர் தப்பிய ஒரு சிறுமி மட்டும் மயக்க நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர்கள் நால்வரும் யார் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+