ராஜஸ்தானில் நடுராத்திரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!
பிகானெர்: ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உணரப்பட்ட நிலநடுக்கும் ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5ஆகவும் பதிவாகியுள்ளது.
அண்மைக் காலமாக இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேசம், காஷ்மீர், பஞ்சாப் உள்பட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் நடு இரவில் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதன் வீடியோக்களும் சமூக வலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
டெல்லி உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான காரணமாக ஆப்கானிஸ்தானாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவான நிலையில், அதன் தாக்கம் தான் இந்தியா உள்பட பல நாடுகளில் உணரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் தற்போது அருணாச்சல பிரதேசத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அம்மாநிலத்தின் சங்லாங் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது. அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்திலும் இரவு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானெர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தை பொதுமக்கள் உணர்ந்ததால் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகாலை 2.16 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுத்தால் எந்தவித பாதிப்பும், சேதமும் நிகழவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications