சீனாவில் கடுமையான நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின.. ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு
பீஜிங்: தென் மேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் ஆடின, மக்கள் தெருக்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இன்று மாலை கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. குன்கையுவான் நகரை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவுக்கு இந்த நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டன. கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. வீட்டிலிருந்த பொருட்கள் கீழ விழுந்து நொறுங்கியுள்ளன.
Breaking: A 7.0-magnitude earthquake hit Jiuzhaigou County in southwest China's Sichuan Province at 9:19 p.m. Tuesday (Beijing Time). pic.twitter.com/sZ8xm8N8lq
— China Xinhua News (@XHNews) August 8, 2017
இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் உடனடியாக தெரியவில்லை. மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர். சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின்போது சுமார் 70000 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications