கல்யாணத்தில் நடனம் ஆடியதால் பிரச்சனை.. மேற்கு வங்கத்தில் மனைவியை கொன்ற கணவன்
கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
Recommended Video

கொல்கத்தா: கல்யாண நிகழ்வில் நடனம் ஆடியதால் மேற்கு வங்கத்தில் கொலை சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனால் சப்னா என்ற பெண்ணை அவரது கணவன் சுபீர் என்பவர் கொலை செய்து இருக்கிறார்.
இவர்கள் இருவருக்கு திருமணம் நடந்து சில மாதங்களே ஆகிறது. ஏற்கனவே இந்த பெண்ணை சுபீர் பல முறை கொடுமைபடுத்தி இருக்கிறார்.
சுபீரும், அவரது அம்மாவும் இந்த மரணத்தில் தொடர்புடையவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கொலையை இவர்கள் தற்கொலை போல சித்தரிக்க முயன்றதும் அம்பலம் ஆகியுள்ளது.

கல்யாணம்
பல நாள் பிரச்சனைக்கு இடையில்தான் இந்த தம்பதி அதே பகுதியில் நடந்த உறவினர்கள் திருமணம் ஒன்றிற்கு சென்று இருக்கிறார்கள். அந்த திருமணம் சுபீரின் உறவினர்கள் திருமணம் என்று கூறப்படுகிறது. அங்குதான் சப்னா நடனம் ஆடியுள்ளார்.

தாக்கினார்
சப்னா நடனம் ஆடும் போதே அவரது கணவன் வந்து தடுத்துள்ளார். எல்லோருக்கும் முன்பு ஆடுவது தவறு என்று திட்டி இருக்கிறார். ஆனால் வட இந்திய திருமணங்களில் பெண்கள் நடனம் ஆடுவது மிகவும் இயல்பான ஒன்றாகும்.

அடித்தார்
இதனால் அவர்கள் இருவருக்கு இடையில் சண்டை வந்து இருக்கிறார். அதே இடத்தில் வைத்து எல்லோருக்கும் முன்னிலையில் அந்த பெண்ணை சாப்பிடும் தட்டால் அடித்துள்ளார். இதில் அவர் முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.

மரணம்
இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக அந்த பெண்ணை சுபீர் கொலை செய்துள்ளார். இந்த கொலைக்கு சுபீரின் தாயும் உடந்தையாக இருந்துள்ளார். கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு பின் தற்கொலை என்று நாடகம் ஆடியதும் அம்பலமாகியுள்ளது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications