அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. ஜம்மு காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!.. மக்கள் அச்சம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர். அதிகாலை 4.33 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது.
சமீபத்தில் சீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 150 பேர் வரை உயிரிழந்த நிலையில், தற்போது இந்த நிலநடுக்கம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜிஷிஷன் மாவட்டத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.2 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் அருகிலுள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த கின்காய் மாகாணமும் குலுங்கியது. இதில் கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை கூறினர். மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கான்சு மாகாணத்தில் மட்டும் 117 போ் உயிரிழந்தனர். கின்காய் மாகாணத்தில் 31 போ் இறந்தனர்.
இந்நிலையில் சீனாவின் எல்லையையொட்டி அமைந்திருக்கும் ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.5 என பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பீதியடைந்துள்ளனர். தற்போது ஜம்மு காஷ்மீரில் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், நிலநடுக்கம் தீவிரமாக பதிவாகியிருந்தால் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும் என உள்ளூர் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications