For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

செல்லாத ரூ500 நோட்டை வாங்க மறுத்த தகராறில் சிறுமி பலாத்காரம்... உ.பி.யில் படுபயங்கரம்!

பழைய 500 ரூபாய் நோட்டு பஞ்சாயத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்.

By Mathi
Google Oneindia Tamil News

பரேய்லி: செல்லாத ரூ500 நோட்டை தந்தை வாங்க மறுத்து தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த கும்பல் அவரது 15 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

ரூபாய் நோட்டுகள் செல்லாது விவகாரத்தில் உயிர் பலிகள் தொடர் கதையாகி வருகின்றன. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய நோட்டுகளை வாங்க வங்கிகள், ஏடிஎம்களுக்கு சென்ற 75 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பழைய ரூபாய் நோட்டு...

பழைய ரூபாய் நோட்டு...

அத்துடன் மட்டுமின்றி சமூகத்தில் பல்வேறு மோசமான விளைவுகளையும் இந்த ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு விவகாரம் உருவாக்கியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பரேய்லியில் வரட்டிகளை விற்பனை செய்து வரும் வியாபாரியிடம் 3 பேர் கொண்ட கும்பல் வியாபாரம் பேசியுள்ளது. அப்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து வரட்டிகளைக் கேட்டிருக்கிறது.

தகராறு..

தகராறு..

ஆனால் பழைய 500 ரூபாய் நோட்டுகளை அவர் வாங்க மறுத்துவிட்டார். இதில் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இளம்பெண் பலாத்காரம்

இளம்பெண் பலாத்காரம்

அதில் ஆத்திரமடைந்த 3 பேர் கொண்ட கும்பல் வரட்டி விற்பனையாளரின் வீட்டுக்கு சென்றுள்ளது. அங்கு தனியாக இருந்த அவரது 15 வயது மகளை கடத்திச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறது.

9-ம் வகுப்பு மாணவர்

9-ம் வகுப்பு மாணவர்


இந்த பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரில் ஒருவர் 9-ம் வகுப்பு மாணவர். இது தொடர்பாக வரட்டி விற்பனையாளர் போலீசில் புகார் செய்துள்ளார். தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ரூ500 நோட்டு விவகாரம் ஏற்படுத்தியுள்ள மிக மோசமான இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A minor girl was raped after a scuffle between a cow dung seller and three persons over the old Rs 500 note.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X