2ஜி வழக்கின் முக்கிய சாட்சியான ஆ.ராசாவின் உதவியாளர் பா.ஜ.கவில் இணைந்தார்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி லோக்சபா தொகுதி திமுக வேட்பாளருமான ஆ.ராசாவின் உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரி நேற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சரான ஆ.ராசா மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழல் வழக்கு விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆ.ராசாவின் கூடுதல் தனி உதவியாளராக பணிபுரிந்த ஆசீர்வாதம் ஆச்சாரி முக்கியமான சாட்சியமாக இருந்து வருகிறார். இதன் காரணமாக ஆசீர்வாத ஆச்சாரிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று பாஜக மூத்த தலைவர்களான சுப்பிரமணியசாமி, ஜே.பி.நந்தா ஆகியோர் முன்னிலையில், ஆசீர்வாதம் ஆச்சாரி அக்கட்சியில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications