பீகாரில் மர்மநபர்களால் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
பாட்னா: பீகார் மாநிலத்தில் ஹிந்துஸ்தான் நாளிதழில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் இதழில் தலைமை நிருபராக பணியாற்றி வருபவர் ராஜ்தியோ ரஞ்சன். இவர் தனது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள ரயில் நிலையம் அருகே அவர் வந்த போது திடீரென ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாறியாக சுட்டுக் கொன்றது.

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதையடுத்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜ்தியோ உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்தியாவில் ஒன்பது பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பீகாரில், காரில் முந்தி சென்றக் காரணத்திற்காக 19 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக அம்மாநில எம்.எல்.சி.மனோரமா தேவி என்பவரின் மகன் ராக்கி யாதவ் கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications