Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கர துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் உட்பட 3 பேர் பலி

ஜம்மூ-காஷ்மீர் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிராவதிகள் பாதுகாப்புப்படையினர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

போண்டிபோரா மாவட்டத்தில் உள்ள மான்ஸ்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினருடன் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிராமத்தை சுற்றிவளைத்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

A soldier and 2 militants killed in a gunfight in Kashmir

இதனையறிந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இருதரப்புக்கும் இடையே விடிய விடிய நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்புப்படை அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை ப்பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே பாரமுல்லா மாவட்டம் துஜ்ஜார் கிராமத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த தீவிரவாதி காவல்துறையினர் சுற்றி வளைத்ததால் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+