இவரும் ஒரு மகனா?... பெற்ற தாயை மாடியிலிருந்து கீழே வீசிக் கொன்ற கொடூரன்!
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை கவனித்துக்கொள்ள அலுப்புப்பட்டு அவரது மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

ராஜ்கோட்: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தாயை கவனித்துக்கொள்ள அலுப்படைந்து அவரது மகனே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் வசித்து வந்தவர் ஜெய்ஸ்ரீபென். 64 வயதான இவருக்கு 36 வயதில் சந்தீப் நத்வானி என்ற மகன் உள்ளார்.
சந்தீப் நத்வானி ராஜ்கோட்டில் உள்ள ஃபார்மஸி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகின்றார். தாயும் மகனும் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர்.

படுத்த படுக்கையான தாய்
இந்நிலையில் ஜெய்ஸ்ரீபென் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். படுத்த படுக்கையான அவரை மகன் சந்தீப் நத்வானிதான் கவனித்து வந்தார்.

தற்கொலை செய்த தாய்
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி ஜெய்ஸ்ரீபென் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மாட்டிவிட்ட சிசிடிவி
இந்நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளில் சந்தீப் தனது தாயை மாடிக்கு படி வழியாக தூக்கி செல்வதும், பின்னர் அவர் மட்டும் தனியாக கதவை திறந்து உள்ளேசெல்லும் காட்சிகளும் உள்ளன.

சிசிடிவியில் பதிவான காட்சிகள்
அவர் உள்ளே சென்ற அடுத்த சில நிமிடங்களில் ஒரு நபர் ஓடிவந்து ஏதோ கூறுகிறார். இதையடுத்து சந்தீப் பதறியடித்துக்கொண்டு கீழே செல்வதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

போலீசார் கிடுக்கிப்பிடி
இந்த வீடியோ காட்சிகளை கைப்பற்றிய போலீசார் சந்தீப்பிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் தாயை மாடியில் இருந்து தள்ளி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் சந்தீப்.

சலீப்பானதால் கொலை
தாயை கவனித்து கவனித்து சலிப்படைந்ததால் கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதன்படி மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்து தற்கொலை நாடகமாடியதாகவும் சந்தீப் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தாயை மகனே கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications