கொரோனாவால் பறி போன டீச்சர் வேலை.. குப்பை லாரி ஓட்டும் பெண்.. குடும்பத்துக்காக.. ஒடிஷாவில் உருக்கம்!
புவனேஸ்வரம்: கொரோனாவால் வேலையை இழந்த ஆசிரியை ஒருவர் குடும்ப வறுமைக்காக குப்பை சேகரிக்கும் வேனின் ஓட்டுநராக மாறியுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளிகள், கல்லூரிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான பணிகள் உள்ளிட்டவை இயங்கவில்லை.
ஊரடங்கு இருந்தாலும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். இதில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் தப்பவில்லை.

ஆசிரியை
அந்த வகையில் ஒடிஸா மாநிலத்தில் ஒரு ஆசிரியை கொரோனா கால ஊரடங்கால் இழந்துவிட்டார். இவரும் கணவர் ஆட்டோமொபைல் துறையில் இருந்தார். அவருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டில் இரு குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

குப்பை சேகரிக்கும் வேன்
இதையடுத்து அந்த பெண் குப்பை சேகரிக்கும் வேனின் ஓட்டுநராக சென்றுவிட்டார். அதாவது புவனேஸ்வரம் மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் வேனில் பணியாற்றி வருகிறார். இந்த வேலை தனக்கு பிடிக்காவிட்டாலும் தனது குடும்பத்தினரின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காக இதை செய்தாக வேண்டும் என கூறுகிறார்.

குழந்தைகள்
மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தல் மற்றும் தனது வீட்டு வேலைகளை செய்து வருகிறார். இவரை போல் ஏராளமானோர் வேலையை இழந்து தங்களுக்கு சம்பந்தமே இல்லாத தொழில்களில் வயிற்றுப் பிழைப்புக்காக செய்து வருகிறார்கள்.

செல்போன்
அது போல் ஒடிஸாவில் செல்போன் வாங்க பணம் இல்லாததால் நிறைய மாணவர்கள் படிப்பை கைவிடும் சூழல் எழுந்துள்ளது. 4 பேருக்கு ஒரு செல்போன் என்ற வீதத்தில் படித்து வருகிறார்கள். இதுவும் செல்போன் இருக்கும் வரை தங்களால் படிக்க முடிகிறது. பிறகு பள்ளியிலிருந்து அனுப்பும் பாடங்களை படிக்க முடியவில்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications