ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்! என்கவுண்ட்டரில் தீவிரவாதி கொலை!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 பேர் பலியாகியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டிருக்கிறார்.
ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, முதல்வராக வெற்றி பெற்றிருக்கிறார். வெற்றி பெற்ற கையோடு, மாநில அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மறுபுறும், தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளன.

நேற்று கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் பகுதியில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இங்கு சுரங்கபாதையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மாலை தீவிரவாதிகள் சிலர், பணியாற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறையல்ல. கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஷோபியான் மாவட்டத்தில் பீகாரை சேர்ந்த தொழிலாளி சுட்டு கொல்லப்பட்டார். அதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் இதேபோல இரண்டு தொழிலாளர் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்த தொடர் தாக்குதலையடுத்து நேற்று பாதுகாப்பு படையினருடன் சேர்ந்து ஜம்மு காஷ்மீர் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். அவரிடமிருந்து ஏகே 47 ரக துப்பாகி, கை துப்பாக்கிகள், ஏராளமான தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.
இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "உளவுத்துறையின் தகவலையடுத்து பாரமுல்லா பகுதியில் நாங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். எல்லை தாண்டி வந்த பயங்கரவாதி ஒருவர் பாரமுல்லாவில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேடுதல் பணியின் போது எங்களை நோக்கி பயங்கரவாதி துப்பாக்கியால் சுட்டார், எனவே தற்காப்புக்காக தாக்குதல் நடத்தப்பட்டபோது அவர் உயிரிழந்தார்" என்று கூறியுள்ளார்.
புலம் பெயர் தொழிலாளர்களின் கொலைக்கு பழிவாங்கவே, என்கவுண்டர் செய்யப்பட்டாகவும் சொல்லப்படுகிறது. தொழிலாளர்கள் கொலை குறித்து முதல்வர் ஓமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications