ஒரு பெண் குழந்தை பிறந்தால் 111 மரம் நடப்படும்.. ராஜஸ்தானில் விசித்திரமான கிராமம்
ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள் நடப்படுகிறது.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள கிராமம் ஒன்றில் பிறக்கும் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் 111 மரங்கள் நடப்படுகிறது. பிப்லாந்திரி என்ற கிராமத்தில் என்ற இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.
இதற்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகிறது. அதேபோல் ஒரு பெண் இறந்தால் 11 மரங்கள் வைத்து பூஜை செய்கிறார்கள்.
தற்போது இந்த கிராமத்தை மக்கள் வந்து ஆச்சர்யமாக பார்த்துவிட்டு செல்கிறார்கள். அம்மாநில அரசு இந்த கிராமத்தை பாராட்டி இருக்கிறது.

எத்தனை வருடம்
கடந்த ஆறு வருடமாக இவர்கள் இப்படி மரம் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் மரங்கள் வரை 6 வருடத்தில் இவர்கள் நட்டு இருக்கிறார்கள். அந்த கிராமத்தின் சுற்றுச்சூழலையே இது மாற்றியுள்ளது.

எத்தனை மரம்
ஒரு பெண் குழந்தை பிறந்த வுடன் 111 மரங்களை இவர்கள் நட்டு விடுவார்கள். அந்த பெண் குழந்தைக்கு வைக்கப்படும் பெயர்தான் அந்த மரத்திற்கும் வைக்கப்படும். பின் அந்த மரத்தை கடைசி காலம் வரை அந்த பெண்ணின் குடும்பம் பாதுகாக்கும். ஒரு பெண் இறந்தால் 11 மரங்கள் வைத்து பூஜை செய்கிறார்கள்.

21, 000 மரம்
அதேபோல் ஒரு வீட்டில் பெண் பிறந்தவுடன் அந்த ஊரில் இருக்கும் எல்லோரிடமும் பணம் வாங்கப்படும். மொத்தம் 21 ஆயிரம் ரூபாய் வாங்கப்படும். பின் அந்த பெண்ணின் அப்பாவிடம் இருந்து 10 ஆயிரம் வாங்கப்படும். இது அப்படியே பெண்ணின் பெயரில் பிக்சட் டெபாசிட் செய்யப்படும். 21 வயது வரும் வரை இதில் பணம் போடப்படும்.

காரணம்
பெண் குழந்தைகளையும், இயற்கையையும் மதிக்க வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் நடைபெறுகிறது. இந்த ஆறு வருடத்தில் அந்த கிராமம் மொத்தமாக மாறியுள்ளது. அதேபோல் பெண்களும் அங்கு மிகவும் சுதந்திரத்துடன் இருக்கிறார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications