ஆதாரை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியவில்லை.. உணவு பொருள் கிடைக்காமல் பட்டினியில் பெண் மரணம்
ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பசியில் மரணம் அடைந்து இருக்கிறார்.
அலஹாபாத்: ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷகினா ஆஸ்பாக் என்ற பெண்ணுக்கு உணவுப் பொருட்கள் மறுக்கப்பட்டு இருக்கிறது. இவர் பல முறை கெஞ்சியும் எந்த உணவு பொருளும் வழங்கப்படவில்லை.
கடைசி வரை இவருக்கு ரேஷன் கார்டையும் ஆதார் கார்டையும் இணைப்பது எப்படி என்று தெரியாமல் இருந்துள்ளது. இதன் காரணமாக அவர் பசியில் மரணம் அடைந்து இருக்கிறார்.
இவரது மரணத்தை அடுத்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் விசாரணைக்கு உத்தரவிட்டு இருக்கிறார். இவருக்கு ரேஷன் ஊழியர்கள் செய்த கொடுமைகள் குறித்து அந்த பெண்ணின் உறவினர்கள் உருக்கமாக பேசி இருக்கின்றனர்.

ஆதார் கார்டை இணைக்க முடியவில்லை
ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்ற உத்தரவால் உத்தரபிரதேசத்தில் பலருக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது தாமதமாகி இருக்கிறது. இந்த நிலையில் ஷகினா ஆஸ்பாக் என்ற பெண் கடத்த ஒரு மாதமாக ரேஷன் கார்டையும் ஆதார் கார்டையும் இணைக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறார். இவரது உடல் நிலை சரி இல்லாத காரணத்தை கூறியும் அவர்களுக்கு சென்ற மாதத்திற்கான உணவுப் பொருட்கள் மறுக்கப்பட்டு இருக்கிறது.

ஊழியர் காலில் விழுந்தனர்
இதையடுத்து ஷகினா ஆஸ்பாக் கணவர் முகமது ஆஸ்பாக் ரேஷன் ஊழியர்களிடம் சென்று ஷாகினாவின் நிலைமையை கூறி அழுது இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அங்கு இருந்து எல்லா ஊழியர்களின் காலிலும் அவர் விழுந்து கெஞ்சி இருக்கிறார். ஆனால் ஆதார் கார்டை இணைத்தால் மட்டுமே ரேஷன் தருவோம் என ஊழியர்கள் கண்டிப்பாக மறுத்து விட்டனர்.

5 நாட்களாக பட்டினி
ரேஷன் பொருட்கள் இல்லாததால் அந்த குடும்பம் உணவு சமைக்க முடியாமல் கஷ்டப்பட்டு இருக்கிறது. ஷகினா ஆஸ்பாக் இதன் காரணமாக தொடர்ந்து ஐந்து நாட்களாக சாப்பிடாமல் இருந்திருக்கிறார். வெறும் தண்ணியை மட்டுமே அவர் குடித்து வந்ததாக அவரது உறவினர்கள் கூறுகிறார்கள். மேலும் அவருக்கு இதன் காரணமாக திடீர் என்று உடல் நல குறைவு ஏற்பட்டு படுத்த படுக்கையாக ஆகிவிட்டார் என்றும் கூறியுள்ளனர்.

விசாரணை தொடங்கியது
இதையடுத்து அவர் நேற்று மாலை கொடுமையான பசி தாங்க முடியாமல் மரணம் அடைந்தார். தற்போது அவர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. அந்த ரேஷன் கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இந்தப் பிரச்சனை குறித்து விசாரணை செய்ய உத்தரவிட்டு இருக்கிறார். ஆனால் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்களும் இன்னும் சாப்பிடாமல் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications