Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த மாசம் கல்யாணம்.. ஆசிரியை முன் விமானத்தில் சுயஇன்பம் செய்த என்ஜினியர்.. அடுத்து நடந்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள 32 வயது இளைஞர் ஒருவர் புனேவில் இருந்து நாக்பூருக்கு சென்ற விமானத்தில் பயணித்தள்ளார். அப்போது ஓடும் விமானத்தில் 40 வயது பெண்ணிடம் சுயஇன்பம் செய்து அநாகரீகமான சைகை காட்டியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

புனேவின் கோந்த்வா பகுதியில் வசிக்கும் ஃபெரோஸ் ஷேக் (வயது 32). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற போகிறது. இவர் புனேவில் இருந்து நாக்பூருக்கு கடந்த திங்கள்கிழமை அன்று பயணித்துள்ளார்.

 A youth allegedly masturbated and made a lewd gesture at a woman on a flight

அதே விமானத்தில் சந்திராபூரைச் சேர்ந்த 40 வயதாகும்ஆசிரியை ஒருவர் பயணித்துள்ளார். அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய நாக்பூருக்குச் சென்று கொண்டிருந்தார். தந்தை இறந்த சோகத்தில் அரை மயக்க நிலையில் இருந்த ஆசிரியை..விமானத்தில் ஏறிய உடனேயே தூங்கிவிட்டார்.

அப்போது விமானத்தில் ஜன்னல் ஓரத்தில் ஆசிரியையின் அருகில் அமர்ந்திருந்த ஃபெரோஸ் ஷேக், திடீரென சுயஇன்பம் செய்து அசிங்கமாக செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. 40 வயது ஆசிரியை சொறிந்து கொண்டிருந்ததால், அலட்சியப்படுத்தினாராம். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சொரிந்து கொண்டே இருந்ததால், என்ன இந்த இளைஞர்..இப்படியே நம்மை தொட்டுக் கொண்டிருக்கிறார் என்று கண் விழித்து பார்த்தார். அப்போது தான் அந்த இளைஞர், சுயஇன்பம் செய்து அசிங்கமாக செய்கை காட்டியதை கண்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்து அலறினார் ஆசிரியை.. இதையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்கள்.அப்போது நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்கள். உடனேவிமான பணிப்பெண்களை அழைத்து நடந்ததை கூற முயன்றுள்ளார்கள்.அதற்குள் விமானம் தரையிறங்கியது. இதையடுத்து கனநிமிடத்தில் விமானத்தில் இருந்து இறங்கி தப்பி ஓட ஃபெரோஸ் ஷேக் முயன்றுள்ளார். இதையடுத்து பெண்கள் கூச்சலிட்டனர்.

உடனடியாக சிஐஎஸ்எப் காவலர்கள், ஃபெரோஸ் ஷேக்கை கையும்களவுமாக பிடித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவம் அனைத்தையும் ஆசிரியை கூறினார். உடனடியா ஃபெரோஸ் ஷேக்கை கைது செய்த போலீசார், அவர் யார் என்ற விவரத்தை விசாரித்தனர். அப்போது ஃபெரோஸ் ஷேக் நாக்பூருக்கு அருகில் உள்ள கொரடியில் உள்ள தொழிற்சாலை தண்ணீர் ஆலைக்கு வேலைக்காகச் சென்று கொண்டிருந்ததும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிய வந்தது.

ஃபெரோஸ் க்ஷேக் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354 ( பெண்ணை தாக்குதல் அல்லது குற்ற நோக்கோடு செயல்படுதல், அவளது அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல்), 354 (ஏ) (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 ( பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் சைகை செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+