அடுத்த மாசம் கல்யாணம்.. ஆசிரியை முன் விமானத்தில் சுயஇன்பம் செய்த என்ஜினியர்.. அடுத்து நடந்த சம்பவம்
மும்பை: அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள 32 வயது இளைஞர் ஒருவர் புனேவில் இருந்து நாக்பூருக்கு சென்ற விமானத்தில் பயணித்தள்ளார். அப்போது ஓடும் விமானத்தில் 40 வயது பெண்ணிடம் சுயஇன்பம் செய்து அநாகரீகமான சைகை காட்டியதால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
புனேவின் கோந்த்வா பகுதியில் வசிக்கும் ஃபெரோஸ் ஷேக் (வயது 32). இவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார் இவருக்கு திருமணம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் திருமணம் நடைபெற போகிறது. இவர் புனேவில் இருந்து நாக்பூருக்கு கடந்த திங்கள்கிழமை அன்று பயணித்துள்ளார்.

அதே விமானத்தில் சந்திராபூரைச் சேர்ந்த 40 வயதாகும்ஆசிரியை ஒருவர் பயணித்துள்ளார். அவரது தந்தையின் இறுதிச் சடங்குகளைச் செய்ய நாக்பூருக்குச் சென்று கொண்டிருந்தார். தந்தை இறந்த சோகத்தில் அரை மயக்க நிலையில் இருந்த ஆசிரியை..விமானத்தில் ஏறிய உடனேயே தூங்கிவிட்டார்.
அப்போது விமானத்தில் ஜன்னல் ஓரத்தில் ஆசிரியையின் அருகில் அமர்ந்திருந்த ஃபெரோஸ் ஷேக், திடீரென சுயஇன்பம் செய்து அசிங்கமாக செய்கை காட்டியதாக கூறப்படுகிறது. 40 வயது ஆசிரியை சொறிந்து கொண்டிருந்ததால், அலட்சியப்படுத்தினாராம். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சொரிந்து கொண்டே இருந்ததால், என்ன இந்த இளைஞர்..இப்படியே நம்மை தொட்டுக் கொண்டிருக்கிறார் என்று கண் விழித்து பார்த்தார். அப்போது தான் அந்த இளைஞர், சுயஇன்பம் செய்து அசிங்கமாக செய்கை காட்டியதை கண்டு ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து இருக்கையில் இருந்து எழுந்து அலறினார் ஆசிரியை.. இதையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் என்ன நடந்தது என்று கேட்டுள்ளார்கள்.அப்போது நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார்கள். உடனேவிமான பணிப்பெண்களை அழைத்து நடந்ததை கூற முயன்றுள்ளார்கள்.அதற்குள் விமானம் தரையிறங்கியது. இதையடுத்து கனநிமிடத்தில் விமானத்தில் இருந்து இறங்கி தப்பி ஓட ஃபெரோஸ் ஷேக் முயன்றுள்ளார். இதையடுத்து பெண்கள் கூச்சலிட்டனர்.
உடனடியாக சிஐஎஸ்எப் காவலர்கள், ஃபெரோஸ் ஷேக்கை கையும்களவுமாக பிடித்தனர். அப்போதுதான் நடந்த சம்பவம் அனைத்தையும் ஆசிரியை கூறினார். உடனடியா ஃபெரோஸ் ஷேக்கை கைது செய்த போலீசார், அவர் யார் என்ற விவரத்தை விசாரித்தனர். அப்போது ஃபெரோஸ் ஷேக் நாக்பூருக்கு அருகில் உள்ள கொரடியில் உள்ள தொழிற்சாலை தண்ணீர் ஆலைக்கு வேலைக்காகச் சென்று கொண்டிருந்ததும் அடுத்த மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிய வந்தது.
ஃபெரோஸ் க்ஷேக் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354 ( பெண்ணை தாக்குதல் அல்லது குற்ற நோக்கோடு செயல்படுதல், அவளது அடக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுதல்), 354 (ஏ) (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 509 ( பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் நோக்கில் சைகை செய்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications