நாடாளுமன்றத் தேர்தல்: பிரதமர் வேட்பாளராகிறாரா கெஜ்ரிவால்...? - ஆம் ஆத்மி சூசகம்
டெல்லி: நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் குறித்து இன்னும் முடிவு செய்யப் படவில்லை என அக்கட்சியின் மூத்தத் தலைவர் யோகேந்திர யாதவ் தெரிவித்துள்ளதன் மூலம், கெஜ்ரிவால் பிரதமர் பதவிக்கு போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. கட்சி தொடங்கிர ஓராண்டிற்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களிடம் செல்வாக்கைப் பெற்றுள்ள அக்கட்சி, தனது அடுத்த இலக்காக நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, டெல்லி தவிர பிறமாநிலங்களிலும் தனது கட்சியை வேரூன்றச் செய்யும் நடவடிக்கைகளில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில், நேற்று இதுபற்றி 'ஆம்ஆத்மி' கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவிடம் கேட்கப் பட்டபோது, 'அரவிந்த் கெஜ்ரிவாலோ அல்லது ஆம்ஆத்மி எம்.எல்.ஏ.க்களோநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை' என அவர் கூறியுள்ளார்.
இதன்மூலம், கெஜ்ரிவால், பிரதமர் பதவி போட்டியில் இருப்பதை அவர் சூசகமாக உணர்த்தியதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications