ஆம் ஆத்மியில் இருந்து பிரசாந்த் பூஷண், யோகேந்திரா அதிரடி நீக்கம்!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து பிரசாந்த் பூஷண் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கேஜ்ரிவாலுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதனால் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் கட்சியின் அரசியல் விவகார குழுவில் இருந்து நீக்கப்பட்டனர்.

அக்கட்சியில் மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்நிலையில் கேஜ்ரிவாலின் செல்போன் உரையாடல் கொண்ட டேப் வெளியாகி கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோரை கெஜ்ரிவால் கடுமையாக தாக்கி கூறியிருந்தார். அதில் 67 எம்.எல்.ஏ.க் களுடன் ஆம் ஆத்மியை விட்டு வெளியேறுவேன் என்றும் கேஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்க வந்தபோது ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்து வரவேற்றனர்.
அதன் பிறகு அங்கு வந்த யோகேந்திர யாதவ் கூட்டம் நடந்த இடத்துக்குச் செல்லாமல் கட்சி அலுவலகம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் பிரசாந்த் பூஷணுடன் இணைந்து கூட்டத்தில் பங்கேற்றார்.
ஆம் ஆத்மி தொண்டர்களோ பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூஷண் ஆகியோரை ஆம் ஆத்மியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இருவருக்கும் ஆதரவாக 20 பேரும் எதிராக 200 பேரும் வாக்களித்தனர். இதனால் இருவரும் அக்கட்சியின் தேசிய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டனர். இதனிடையே தங்களை நீக்கியது ஜனநாயகப் படுகொலை என்று பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவும் சாடியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications