சோனியாவை எதிர்த்து முன்னாள் நீதிபதியை களமிறக்கிய ஆம் ஆத்மி கட்சி
ரேபரேலி: உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சோனியாவை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் சட்டீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் நீதிபதி பக்ருதீன் போட்டியிட உள்ளார்.
ஆம் ஆத்மி கட்சி தனது 14வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, உத்தர பிரதேசத்தில் 10 வேட்பாளர்களும், குஜராத் மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்கு தலா இரண்டு வேட்பாளர்களும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்திற்கு தலா ஒரு வேட்பாளர்களும், சத்தீஸ்கரில் மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
லால் பகதூர் சாஸ்திரியின் பேரனான ஆதர்ஷ் சாஸ்திரி அலகாபாத் தொகுதியில் போட்டியிடுவதால் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட முன்னாள் நீதிபதி பக்ருதீன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற நீதிபதி பக்ருதீன் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.
14-வது பட்டியலுடன் சேர்த்து இதுவரை ஆம் ஆத்மி மொத்தம் 426 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.Click Here