டெல்லியில் 16 வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக 50 தொகுதிகளை வென்ற ஆம் ஆத்மி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் 16 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக ஒரு கட்சி 50 தொகுதிகளுக்கும் மேல் தனித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த சாதனை ஆம் ஆத்மிக்கே சொந்தம்.
1993ல் டெல்லி சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 70-ஆக உயர்த்தப்பட்டது. அதன்பிறகு எப்போதுமே காங்கிரஸ் மற்றும் பாஜக நடுவேதான் டெல்லியில் போட்டி இருந்து வந்தது. 1998 முதல் 15 ஆண்டுகாலமாக காங்கிரஸ்தான் தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது.

1993-ம் ஆண்டு தேர்தலில் பாஜக 49 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. 1998ல் காங்கிரஸ் 52 தொகுதிகளை வென்றது. டெல்லி முதல் முறையாக 50 தொகுதிகளை ஒரே கட்சிக்கு கொடுத்தது அப்போதுதான் முதல்முறை.
2003ல் 47 தொகுதிகளையும், 2008ல் 43 இடங்களையும் காங்கிரஸ் வென்றது. எனவே 16 வருடங்களுக்கு பிறகு இப்போது ஆம் ஆத்மி 50 தொகுதிகளுக்கும் மேல் வென்று சாதித்துள்ளது.












Click it and Unblock the Notifications