"காஸ் சேம்பராக" மாறிப் போன டெல்லி... சுத்தப்படுத்த வித்தியாசமான ஐடியாவைக் கையில் எடுத்த கெஜ்ரிவால்
டெல்லி: காஸ் சேம்பர் என்று அழைக்கப்படும் அளவுக்கு அசுத்தமாகிக் கிடக்கிறது டெல்லி. இதையடுத்து டெல்லியை ஓரளவுக்காவது சுத்தப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்துள்ளது டெல்லி மாநில அரசு.
அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் சாலைகளில் ஓடும் கார்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவுள்ளனர். அதாவது ஒற்றைப் படை பதிவெண் கொண்ட கார்கள் ஓடும் நாளில் இரட்டைப்படை எண்களைக் கொண்ட கார்கள் ஓடாது என்றும், இரட்டைப்படை எண்கள் கொண்ட கார்கள் ஓடும் நாளில் ஒற்றைப்படை கார்கள் ஓடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் உலகிலேயே மிகவும் மோசமான மாசு நிறைந்த நகரம் என்ற பெயர் பெற்ற டெல்லியை ஓரளவுக்காவது சுத்தமானதாக மாற்ற முடியும் என்று டெல்லி அரசு நம்புகிறதாம்.

போலீஸ் தரப்பு அதிருப்தி
இருப்பினும் இந்தத் திட்டத்திற்கு டெல்லி காவல்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து முன்கூட்டியே தங்களிடம் டெல்லி ஆம் ஆத்மி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி கூறியுள்ளார். டெல்லி காவல்துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

நாளை இறுதி விவரம்
இந்தத் திட்டத்தை நாளை இறுதி செய்யவுள்ளது கெஜ்ரிவால் அரசு. இதுதொடர்பாக நாளை ஒரு ஆய்வுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அப்போது திட்டம் இறுதி செய்யப்ட்டு அறிவிக்கப்படும்.

பஸ்கள் கூடுதலாக்க கோரிக்கை
இந்தத் திட்டத்தை அமல்படுத்தும்போது டெல்லி போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகளை விடவும், அதேபோல மெட்ரோ ரயிலை அதிகரிக்கவும் மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் மக்களுக்கு பாதிப்பு வராமல் பார்த்துக் கொள்ளப்படும் என்று அது கருதுகிறது.

போலீஸ் அதிருப்தி
ஆனால் இந்தத் திட்டம் பல அசவுகரியங்களுக்கே வழி வகுக்கும் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது தேவையில்லாத குழப்பத்தையே ஏற்படுத்தும். டெல்லி அரசு இதுகுறித்து எங்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் என்றார்.

ஏதாவது செய்தாக வேண்டும் - கெஜ்ரிவால்
திடீரென பாதிக் கார்களை சாலையிலிருந்து குறைத்தால் அதைச் சமாளிக்கக் கூடிய வகையில் பஸ் போக்குவரத்து இல்லை என்று கூறப்படுவது குறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவா்ல் கூறுகையில், உண்மைதான். ஆனால் நாம் ஏதாவது செய்தாக வேண்டும். அப்படி செய்தால்தான் டெல்லியைக் காப்பாற்ற முடியும் என்று கூறியுள்ளார் அவர்.

தனியார் கார்களுக்கு மட்டுமே்
இருப்பினும் இந்தத் திட்டம் தனியார் கார்களுக்கு மட்டுமே. மாறாக அரசுக் கார்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications