ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டி: 'ஆம் ஆத்மி' குமார் விஸ்வாஸ்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிட தயாராக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமார் விஸ்வாஸ் அறிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய குமார் விஸ்வாஸ், லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குமாறு கட்சி தலைமையை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி அமேதி தொகுதியில் போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால்தான் வாரிசு அரசியலுக்கு எதிராக வலுவான கருத்தை முன்வைக்கும். ராகுல் காந்தி, நரேந்திர மோடி, நான் என மூவரும் அமேதி தொகுதியில் போட்டியிடட்டால் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பாருங்கள் என்றார்.












Click it and Unblock the Notifications