பிரச்சாரக் கூட்டத்தில் தேசிய கொடி: ஆம் ஆத்மி தலைவர் விஷ்வாஸுக்கு எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

அமேதி: தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அமேதி மாவட்ட நிர்வாகம் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் அமேதி தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார்.

AAP leader Kumar Vishwas told not to use national flag in campaign

இந்நிலையில் அவர் தனது தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விதிகளை மீறி தேசியக் கொடியை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் முன்னா சிங் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆ.டி. ராமிடம் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து பிரச்சாரக் கூட்டத்தில் தேசியக் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று அமேதி மாவட்ட நிர்வாகம் விஷ்வாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதை மீறி அவர் கொடியை பயன்படுத்தினால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராம்கஞ்ச் பகுதியில் விஷ்வாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளவிருந்த கவி சம்மேளன் நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கவி சம்மேளன் நிகழ்ச்சிக்கு வியாபாரிகள் ஏற்பாடு செய்தபோதிலும் காங்கிரஸால் தான் அதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று விஷ்வாஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் தடையை மீறி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறைக்கு செல்ல தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+