டெல்லி: ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டு பகுதியில் ஆம் ஆத்மி தொண்டர்கள் - போலீசார் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் இரண்டாவது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தர்ணா போராட்டத்தின் போது பேசிய அவர், டெல்லியில் வாழும் பெண்கள் பாதுகாப்பு விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று கூறினார்.

AAP protesters laathi charged near Rail Bhavan

தற்போது டெல்லியில் மழை பெய்து வருவதால் கெஜ்ரிவால் காரில் இருந்தபடியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். போராட்டம் காரணமாக மத்திய டெல்லியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.சில சாலைகள் மூடப்பட்டுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நான்கு மெட்ரோ ரயில் நிலையங்கள் நாளை வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருகிறது.

இந்த நிலையில் ரைசினா சாலையில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இதில் தொண்டர்கள் சிதறி ஓடியதில் பரபரப்பு ஏற்பட்டது.

காவலுக்கு நின்றிருந்த போலீசார் மீது ஆம் ஆத்மி தொண்டர்கள் கற்களை வீசியதாகவும், இதில் ஒரு போலீசார் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+