ஆதரவாளர்களுடன் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆலோசனை! உருவாகிறது புதிய கட்சி!!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தியாளர்களான பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் தமது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி தொடங்குவது குறித்து இன்று ஆலோசனை நடத்தினர்
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்து அரவிந்த் கேஜ்ரிவால் முதல்வராக பதவி ஏற்றதும் அவருக்கும், அக்கட்சியின் முன்னணி தலைவர்களான பிரசாந்த்பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கேஜ்ரிவால் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், கட்சியில் ஜனநாயகம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார்கள். இந்த நிலையில் ஆம் ஆத்மி தேசிய கவுன்சில் உறுப்பினர் பதவியில் இருந்து பிரசாந்த்பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டனர். இது கட்சியில் மேலும் பிளவை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர் இன்று ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்கள். டெல்லியை அடுத்த குர்கானில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஆம் ஆத்மி அதிருப்தியாளர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
இதனிடையே பிரசாந்த் பூஷண் நடத்தும் இந்தக் கூட்டத்துக்கு கட்சி அங்கீகாரம் அளிக்க வில்லை; எனவே இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய்சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications