அமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிட்டால் குமார் விஸ்வாஸ் தோல்வி அடைவார்: லாலு
பாட்னா: லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டால் ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் தோல்வி அடைவார் என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியின் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் போட்டியிடுகிறார். இதையடுத்து அவர் அமேதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.
அமேதியில் பேரணி ஒன்றில் கலந்து கொள்ள வந்த குமார் விஷ்வாஸுக்கு மக்கள் கருப்புக் கொடி காட்டினர். ஆனால் அவர் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இது குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கூறுகையில்,
ஆம் ஆத்மி கட்சி தலைவர் குமார் விஷ்வாஸ் அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்
டியிட்டால் நிச்சயம் தோல்வி அடைவார் என்றார்.