நிதீஷ் குமார் வெற்றிக்கு அனில் போல உதவிய கெஜ்ரிவால் அனுதாபிகள்
டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தலில் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக பத்து லட்சம் பேரிடம் வாக்கு சேகரித்து நிதீஷ் குமாரின் வெற்றிக்கு உதவியுள்ளனர் ஆம் ஆத்மி கட்சியின் அனுதாபிகள்.
இவர்கள் ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் அல்ல. மாறாக கெஜ்ரிவால் மீது அபிமானம் கொண்டவர்கள். சமூக வலைதளத்தில் பிசியாக இருப்பவர்கள். 20ம் தேதி முதல்வராக மீண்டும் பதவியேற்கவுள்ளார் நிதீஷ் குமார். பதவியேற்பு விழாவுக்கு டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையி்ல நிதீஷ் வெற்றிக்கு தாங்களும் கணிசமாக உதவியதாக இவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதை அதிகாரப்பூர்வமற்ற முறையில் முழுநேரமாக செய்ததாக இவர்கள் கூறியுள்ளனர்.

சமூக வலைதளத்தில்
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், சமூக வலைதளம் மூலமாக நாங்கள் நிதீஷுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டோம். 24க்கும் மேற்பட்டோர் அடங்கியோர் குழுவாக இதை செய்தோம்.

கட்சிக்காரர்கள் அல்ல
நாங்கள் ஆம் ஆத்மி கட்சியினர் அல்ல. அதன் மீது ஈடுபாடு கொண்டவர்கள். பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்ந்து நாங்கள் நிதீஷுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தோம்.

எங்களைக் கேட்டுக் கொண்டனர்
நாங்கள் சமூக வலைதளத்தில் சிறப்பாக செயல்படுவோம் என்பதால் எங்களுக்காக பிரசாரம் செய்யுங்கள் என்று ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் கேட்டுக் கொண்டனர். எனவே நாங்கள் இதில் ஈடுபட்டோம் என்றனர் அவர்கள்.

நிறைய செய்தனர்
இதை ஐக்கிய ஜனதாதளத்தின் கே.சி.தியாகியும் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், மிகப் பெரிய அளவில் அவர்கள் உதவினர். அதை மறக்க முடியாது. சமூக வலைதளப் பிரசாரம் எங்களது வெற்றியில் முக்கியமாக அமைந்தது என்றார் தியாகி.












Click it and Unblock the Notifications