பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளின் நிதி பற்றி விசாரிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு கிடைக்கும் நிதி உதவி பற்றி விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 7-ந் தேதி நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது.

AAP wants `transparency’ in political funding

ஆம் ஆத்மி கட்சி டெல்லி தேர்தலை எதிர் கொள்ள கடந்த சில மாதங்களாக தீவிரமாக நிதி வசூல் செய்து வந்தது. இதில் 4 நிறுவனங்கள் தலா ரூ.50 லட்சம் கொடுத்த ரூ.2 கோடி நிதி பற்றி சர்ச்சை எழுந்தது.

ஆம் ஆத்மி கட்சியிலிருந்து வெளியேறியவர்கள் ஒன்று கூடி ஆம் ஆத்மி தன்னார்வ செயல்பாட்டுக் குழுவை (ஏவிஏஎம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறுவினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி நள்ளிரவில் போலியான 4 நிறுவனங்களின் பெயரில் ரூ.50 லட்சம் நிதி திரட்டியதாகவும் அது ஹவாலா பணம் என்றும் இந்த அமைப்பினர் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த நிலையில் ஆம் ஆத்மி சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ‘அதில் கட்சிகளுக்கு பணம் வசூலிக்கப்படுவது பற்றி முழுமையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு வந்த நிதி பற்றி ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+