'ஆப்' கட்சிக்குள் அடிதடி.. ரகளை.. அடக்க முடியாமல் திணறும் அரவிந்த் கேஜ்ரிவால்
டெல்லி: ஆம் ஆத்மி எனப்படும் ஆப் கட்சி (aam aadmpi party) குறுகிய காலத்தில் ஆட்சியைப் பிடித்ததைப் போல அவ்வளவு குறுகிய காலத்திலேயே உட்கட்சி பூசலால் ரணகளப்பட்டும் நிற்கிறது.
கட்சி தொடங்கி 9 மாதத்திலேயே டெல்லி மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்து அசத்திக் காட்டியது அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி. ஆனால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் உட்கட்சி பூசல் ஆம் ஆத்மியில் வெடித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் ஆலோசகராக இருப்பவர் பிரசாந்த் பூஷன். இவர் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக தெரிவித்த கருத்து முதலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பொதுவாக்கெடுப்பு..
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் தொடர்ந்து நீடிப்பது குறித்து அம்மக்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆம் ஆத்மி அலுவலகம் மீது தாக்குதல்..
பிரசாந்த் பூஷனின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஹிந்து அமைப்புகள் ஆம் ஆத்மி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின. தாக்குதலும் நடத்தப்பட்டது.

சொந்த கருத்து
பின்னர் மற்ற கட்சி தலைவர்களைப் போலவே, அரவிந்த் கேஜ்ரிவாலும் அது பிரசாந்த் பூஷனின் சொந்த கருத்து.. கட்சியின் கருத்து இல்லை என்று விளக்கம் அளித்தார்.

கலகக் குரல் எம்.எல்.ஏ.
இந்த பிரச்சனை ஓய்ந்த நிலையில் டெல்லி எம்.எல்.ஏ. வினோத் பின்னி கட்சி தலைமைக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்...

டெல்லி நிர்வாகம் மோசம்..
டெல்லியில் ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. ஆம் ஆத்மி அரசின் நிர்வாகம் மோசம் என்று விமர்சித்தார்.

அமைச்சர் பதவிக்காக..
காங்கிரஸ் கட்சியில் இருந்த வினோத் பின்னி 2011-ல் ஆம் ஆத்மியில் இணைந்தார். டெல்லியில் அரசு அமையும் நிலையில் தமக்கு கேபினட் அமைச்சர் பதவி கேட்டிருக்கிறார். கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனாலேயே வினோத் பின்னி கலகக் குரல் எழுப்புகிறார் என்று கூறப்படுகிறது.

லோக்சபா சீட்டுக்காக?
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், வினோத் பின்னி லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புகிறார். ஆனால் தற்போதைய எம்.எல்.ஏக்கள் எவருக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரமாட்டோம் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றார்.. இந்நிலையில் வினோத் பின்னி அடுத்த என்ன செய்வார் என்ற பரபரப்பு ஆம் ஆத்மியில் இருந்து வருகிறது.

மல்லிகா சாராபாய்
இதேபோல் ஆம் ஆத்மியில் கடந்த வாரம் இணைந்த நாட்டியக் கலைஞர் மல்லிகா சாராபாய், ஆம் ஆத்மியின் மூத்த தலைவரான குமார் விஸ்வாஸை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

அதெப்படி புகழலாம்?
ஆம் ஆத்மி தலைவர் குமார் விஸ்வாஸ், மோடியை சிவாஜியுடன் ஒப்பிட்டு புகழ்ந்ததாக குறிப்பிட்டு சாடியிருக்கிறார் மல்லிகாசாராபாய். குஜராத்தில் பாஜகவுக்கு மாற்று ஆம் ஆத்மி என்று தான் நம்புகிறேன் எனக் கூறிதான் கட்சியில் இணைந்தார் மல்லிகா சாராபாய். இணைந்த ஒருவாரத்திலேயே கட்சியின் மூத்த தலைவருடன் மல்லுக் கட்டுகிறார் சாராபாய்..

கட்டுக்கோப்பாக கட்சி போகுமா?
இந்த களேபரங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி கட்டுப்பாடுமிக்க கட்சியாக ஆம் ஆத்மியை உருவாக்குவாரா கெஜ்ரிவால்? அல்லது கலகலக்க வைப்பாரா? என்பதுதான் பிற அரசியல் கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications