அப்துல் கலாம் நலமாக இருக்கிறார் - வதந்திகளை நம்ப வேண்டாம்: உதவியாளர் தகவல்!
டெல்லி: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நலமுடன் இருப்பதாகவும் அவரது உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவரது உதவியாளர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் தனி உதவியாளர் ஆர்.கே.பிரசாத், 'காலையில் இருந்தே அப்துல் கலாம் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதுகுறித்து எங்கள் அலுவலகத்துக்கு பல தொலைபேசி அழைப்புகள் வந்தவாறு இருந்தன.

யாரோ இந்த விஷமத்தை செய்து வருகிறார்கள். அப்துல் கலாம் தனது லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 17-ந்தேதி திரும்பினார். மறுநாளில் இருந்து தன்னுடைய வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
அப்துல் கலாம் உடல்நலம் குன்றி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தவறான எஸ்.எம்.எஸ். செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். இன்றும் மாணவர்களுடன் தன்னுடைய கலந்துரையாடல் நடத்தினார். மின்னஞ்சல்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications