கக்கூஸ், பாத்ரூம்... ஒரு இடம் விடாமல் ரூ.24 கோடி லஞ்சப் பணத்தை பதுக்கி வைத்த அரசு ஊழியர்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஊழியர் ஒருவர் தான் வாங்கிய லஞ்சப்பணம் ரூபாய் 24 கோடியை குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, படுக்கை அறையில் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், பாலி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பிரணாப் என்பவர் பணியாற்றி வருகிறார். 45 ஆயிரத்தை மாதச் சம்பளமாக பெற்று வந்த பிரணாப், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பொறியாளர் பிரணாப் மீது கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் அண்மையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பாலியில் உள்ள பிரணாப்பின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
படுக்கை அறையின் தரைத்தளத்தில் பெரிய பள்ளம் தோண்டி கட்டு கட்டாக பணம் புதைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த கழிப்பறையை தோண்டியபோது கத்தை கத்தையாக பணம் சிக்கியது. குளியல் அறையின் மேல் பகுதி, பால்கனியின் தரைத் தளத்தில் புத்தம் புது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேற்பரப்பில் ஐநூறு ரூபாய் பரப்பப்பட்டிருந்தன.
இதனிடையே, காவல்துறையினரின் சோதனையின் போது பிரணாப்பின் மனைவி திடீரென வெளியே ஓடிவந்து வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட்டதாக கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் வீட்டின் முன்பு கூடிவிட்டனர். கூட்டத்தை உள்ளூர் காவல்துறையினர் கலைத்தனர்.
சுமார் 21 மணி நேர சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை சாக்குகள், இரும்பு பெட்டிகளில் காவல்துறையினர் நிரப்பினர். ஆனால், அவர்களால் பணத்தை எண்ண முடியவில்லை. இதையடுத்து, பணம் எண்ணும் இயந்திரங்கள் மூன்று கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் ரூபாய் 24 கோடி ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. இதுதவிர பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வங்கி முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, வீட்டில் இருந்து தப்பியோடிய பொறியாளர் பிரணாப்பை கைது செய்த காவல்துறையினர் சோதனையின்போது தாக்க முயன்ற பிரணாப்பின் மகன் தமோயுவையும் கைது செய்தனர்.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications