கக்கூஸ், பாத்ரூம்... ஒரு இடம் விடாமல் ரூ.24 கோடி லஞ்சப் பணத்தை பதுக்கி வைத்த அரசு ஊழியர்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஊழியர் ஒருவர் தான் வாங்கிய லஞ்சப்பணம் ரூபாய் 24 கோடியை குளியல் அறை, கழிப்பறை, தண்ணீர் தொட்டி, படுக்கை அறையில் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரிடம் இருந்து பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேற்குவங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், பாலி மாநகராட்சியில் உதவி பொறியாளராக பிரணாப் என்பவர் பணியாற்றி வருகிறார். 45 ஆயிரத்தை மாதச் சம்பளமாக பெற்று வந்த பிரணாப், சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் பொறியாளர் பிரணாப் மீது கட்டட ஒப்பந்ததாரர் ஒருவர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் அண்மையில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து பாலியில் உள்ள பிரணாப்பின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
படுக்கை அறையின் தரைத்தளத்தில் பெரிய பள்ளம் தோண்டி கட்டு கட்டாக பணம் புதைக்கப்பட்டிருந்தது. வீட்டில் பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த கழிப்பறையை தோண்டியபோது கத்தை கத்தையாக பணம் சிக்கியது. குளியல் அறையின் மேல் பகுதி, பால்கனியின் தரைத் தளத்தில் புத்தம் புது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன. மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் மேற்பரப்பில் ஐநூறு ரூபாய் பரப்பப்பட்டிருந்தன.
இதனிடையே, காவல்துறையினரின் சோதனையின் போது பிரணாப்பின் மனைவி திடீரென வெளியே ஓடிவந்து வீட்டுக்குள் கொள்ளையர்கள் புகுந்துவிட்டதாக கூச்சலிட்டதால் அப்பகுதி மக்கள் வீட்டின் முன்பு கூடிவிட்டனர். கூட்டத்தை உள்ளூர் காவல்துறையினர் கலைத்தனர்.
சுமார் 21 மணி நேர சோதனைக்கு பின்னர் கைப்பற்றப்பட்ட பணத்தை சாக்குகள், இரும்பு பெட்டிகளில் காவல்துறையினர் நிரப்பினர். ஆனால், அவர்களால் பணத்தை எண்ண முடியவில்லை. இதையடுத்து, பணம் எண்ணும் இயந்திரங்கள் மூன்று கொண்டு வரப்பட்டு ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. இதில் மொத்தம் ரூபாய் 24 கோடி ரொக்க பணம் இருப்பது தெரியவந்தது. இதுதவிர பல லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகள், வங்கி முதலீட்டு பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனிடையே, வீட்டில் இருந்து தப்பியோடிய பொறியாளர் பிரணாப்பை கைது செய்த காவல்துறையினர் சோதனையின்போது தாக்க முயன்ற பிரணாப்பின் மகன் தமோயுவையும் கைது செய்தனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications