ஆசிட் வீச்சுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: மத்திய அரசு முடிவு
டெல்லி: பெண்கள் மீது ஆசிட் வீசும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அண்மைக்காலமாக வடமாநிலங்களில் அதிகரித்து வரும் ஆசிட் வீச்சு உள்ளிட்ட சம்பவங்களுக்கு முடிவு காணும் வகையில், சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், பெண்கள் மீது ஆசிட் வீசினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் திரு. ராஜ்நாத்சிங், இதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என தெரிவித்தார். குடும்பத் தகராறு உள்ளிட்டவற்றால் பெண்கள், அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications