பழைய ரூபாய் நோட்டை மாற்றுவதில் முறைகேடு.. வங்கி அதிகாரிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் வங்கி அதிகாரிகள் முறைகேடு ஏதேனும் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மும்பை: பழைய ரூபாய் நோட்டை மாற்றுவதில் வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் வங்கி அதிகாரிகள் முறைகேடு ஏதேனும் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்தில் விடப்படாததாலும், பல இடங்களில் புழக்கத்திற்கு வரவில்லை. பல்வேறு வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதனிடையே பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்ற வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது மத்திய அரசு. பணம் மாற்ற வந்தவர்களே மீண்டும் மீண்டும் வருவதை தடுக்க விரலில் மை வைக்கப்படும் என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வருபவர்களுக்கு ரூ.4,500க்குப் பதிலாக ரூ.2000 மட்டுமே வழங்கப்படும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இதனிடையே ஒரு சில வங்கி அதிகாரிகள் சிலர் கமிஷனுக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி தருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில இடங்களில் வங்கி கிளை அதிகாரிகள் அதிக ரொக்கமாக பணம் பறிமாறப்பட்டது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் மோசடி முறைகளில் ஈடுபட வேண்டாம். ஊழியர்களை கண்காணித்து ரூபாய் நோட்டை மாற்றுவதில் முறைகேடு செய்யும் வங்கி
அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், ரூபாய் நோட்டு விவரத்தை வங்கிகள் பதிவு செய்ய வேண்டும். டெபாசிட் ஆவணங்களை வங்கிகள் முறையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications