குஜராத் கலவரத்தை மறக்கவோ… மன்னிக்கவோ முடியாது: நிதிஷ்குமார்
பாட்னா: "குஜராத் கலவரம் மன்னிக்க மற்றும் மறக்க முடியாதது"என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்ட பின்னர், மோடிக்கு எதிரான கருத்துக்களையே நிதிஷ்குமார் கூறி வருகிறார்.

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் நடந்த பட்டம் விடும் விழாவில் நரேந்திர மோடியுடன் கலந்து கொண்ட இந்தி நடிகர் சல்மான் கான், குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று கூறினார். தொடர்ந்து செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சல்மான் கான் கூறுகையில், மோடி வன்முறை சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க கூடாது என்றும் கூறியிருந்தார்.
இந் நிலையில் குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க தேவையில்லை என்று சல்மான் கான் கூறியது குறித்து நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த நிதிஷ் குமார் "குஜராத் கலவரம் மன்னிக்க மற்றும் மறக்க முடியாதது" என்றார்.
நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதீய ஜனதாவுடனான 17 வருட கூட்டணியை உடைத்து கொண்டு ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications