ஒரு போட்டோவை பார்த்து கழுவிக் கழுவி ஊத்திய ரசிகர்கள்: நடிகை பாமா கோபம்
திருவனந்தபுரம்: நடிகை பாமா வயதான ஒருவரை கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாமா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடித்து வருபவர் பாமா. கேரளாவைச் சேர்ந்த அவர், நடிகை முக்தா பானு மற்றும் பாடகி ரஞ்சினி ஜோஸ் ஆகியோர் ஒரு வயதானவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வாட்ஸ்ஆப்பில் தீயாக பரவியது.
புகைப்படத்தை பார்த்த பலரும் பாமாவை கேவலமாக பேசினர். ஒரு வயதானவருடன் இப்படியா என்று பாமாவை மக்கள் விமர்சித்தனர்.

பாமா
சமூக வலைதளங்களில் தன்னை ரசிகர்கள் கண்டமேனிக்கு கேவலமாக பேசி வருவதை பார்த்த பாமா கோபம் கொண்டார்.

புகைப்படம்
ரசிகர்கள் தன்னை கேவலமாக பேச காரணமான புகைப்படம் குறித்து பாமா ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

ஜோஸ் அங்கிள்
புகைப்படத்தில் இருப்பது நான், நடிகை முக்தா பானு, பாடகி ரஞ்சினி ஜோஸ் மற்றும் அவரது தந்தை ஜோஸ் அங்கிள் என்று பாமா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா
2012ம் ஆண்டு அமெரிக்காவில் மேடை நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. என் அருகே இருப்பவர் ரஞ்சினியின் தந்தை. என்ன நடந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்ள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் பாமா.

வாட்ஸ்ஆப்
வாட்ஸ்ஆப்பில் பார்வர்ட் பட்டனை கிளிக் செய்யும் முன்பு தயவு செய்து யோசியுங்கள். உங்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் நன்றி என்று ஃபேஸ்புக் மூலம் கூறியுள்ளார் பாமா.












Click it and Unblock the Notifications