ஆந்திர சட்டப் பேரவையில் இருந்து நடிகை ரோஜா ஓராண்டு சஸ்பெண்ட்
ஹைதராபாத்: ஆந்திர சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்டதாக நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ஓராண்டுக்கு அவை நடவடிகையில் கலந்து கொள்ள தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திராவில் கால் மணி என்ற பெயரில் கந்து வட்டி கொடுமை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் அம்மாநில எம்.எல்.ஏ., எம்.எல்.சி. உள்ளிட்ட அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. கால் மணி என்ற பெயரில் அப்பாவிகளுக்கு சிறு கடன்களை கொடுத்து அதிகவட்டி வசூலிக்கும் தொழிலை அரசியல் புள்ளிகளின் ஆதரவுடன் சிலர் அமோகமாக நடத்தி வந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில அரசு மெத்தனமாக இருப்பதாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கண்டித்து அக்கட்சியினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆந்திர சட்டசபையில், இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் நிழவியது. பின்னர் அமளியில் ஈடுபட்ட ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சியினர் வலியுறுத்தினர். இதையடுத்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. .
விஜயவாடா பகுதியில் கந்து வட்டி கொடுமை தொடர்வதாகவும், இதில் ஆளுங்கட்சியனருக்கு தொடர்பு இருப்பதாகவும் சட்டப் பேரவையில் ரோஜா பேசினார். மேலும், இதை தடுக்க இயலாத முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு டாக்டர் பட்டம் பெறத் தகுதியில்லை என்றும் பேசினார்.
இந்நிலையில், ஆந்திர சட்டசபையில், முதல்வர் குறி்த்து அவதூறு கருத்து தெரிவித்த எம்.எல்.ஏ. ரோஜா சபை நடவடிக்கைகளில் ஓராண்டிற்கு கலந்துகொள்ள தடைவிதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பதி அருகேயுள்ள நகரி தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் சட்டமன்ற உறுப்பினராக நடிகை ரோஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications