ரூ.3050 கோடியில்.. IntelliSmart நிறுவனத்தை வாங்கிய அதானி எனர்ஜி! ஸ்மார்ட் மீட்டர் சந்தையில் முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்திய மின்சாரத் துறையில் டிஜிட்டல் புரட்சியை வேகப்படுத்தும் வகையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (AESL). நாட்டின் முன்னணி எரிசக்தி நிறுவனமான அதானி குழுமம், ஸ்மார்ட் மீட்டரிங் துறையில் மிக முக்கியமான நிறுவனமான இன்டெல்லிஸ்மார்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் (IntelliSmart) நிறுவனத்தின் 100 சதவீதப் பங்குகளையும் ரூ.3,050 கோடிக்கு முழுமையாகக் கையகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஸ்மார்ட் மீட்டர் சந்தையில் அதானியின் ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்.

இன்டெல்லிஸ்மார்ட் நிறுவனம், மத்திய அரசின் தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி (NIIF) மற்றும் எனர்ஜி எஃபிசியன்சி சர்வீசஸ் லிமிடெட் (EESL) ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக உருவான பொதுத்துறை-தனியார்துறை கூட்டணி நிறுவனமாகும். தற்போது உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், பீகார் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் 2.2 கோடிக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் மீட்டர்களை நிர்வகித்து வரும் இந்த நிறுவனம், இந்தியாவின் டாப்-3 ஸ்மார்ட் மீட்டர் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

Adani Energy Solutions

இந்த கையகப்படுத்தலுக்குப் பிறகு, அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸின் மொத்த ஸ்மார்ட் மீட்டர் போர்ட்ஃபோலியோ 4.7 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் இந்திய ஸ்மார்ட் மீட்டர் சந்தையில் அதானி முதலிடத்தைப் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் வழக்கமான ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் இறுதி நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிறைவு பெறும்.

ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில், இன்டெல்லிஸ்மார்ட்டின் முழு பங்கு மூலதனத்தை அதானி வாங்குவதுடன், NIIF வசம் உள்ள விருப்ப மாற்றத்தக்க கடன் பத்திரங்களையும் (Optionally Convertible Debentures) மீட்டெடுக்கும். இந்த இணைப்பு செயல்பாட்டு ஒத்திசைவை (Operational Synergies) ஏற்படுத்தி, பராமரிப்புச் செலவுகளைக் குறைத்து, தொழில்நுட்ப திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் CEO கந்தர்ப் படேல் கூறுகையில், "இந்தக் கொள்முதல் எங்கள் நிறுவனத்தின் செயல்திறனையும் அளவையும் கணிசமாக உயர்த்தும். தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மூலம் இந்தியாவின் மின் விநியோகக் கட்டமைப்பை நவீனமயமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு இது பெரும் துணையாக அமையும். எங்களின் இலாபகரமான வளர்ச்சி இலக்குக்கு ஏற்ப இந்த ஒப்பந்தம் அமைந்துள்ளது" என்றார்.

இன்டெல்லிஸ்மார்ட் நிர்வாக இயக்குநரும் CEO-வுமான அனில் ராவல், "இந்த வர்த்தகம் எங்கள் பங்குதாரர்களுக்கு பெரும் மதிப்பை உருவாக்கியுள்ளது. இந்திய மின் விநியோகத் துறையின் டிஜிட்டல் மயமாக்கலில் முதலீடுகளை இது துரிதப்படுத்தும்" என்று தெரிவித்தார்.

NIIF மேலாண் பங்குதாரர் வினோத் கிரி, "தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் துறையில் உள்கட்டமைப்பு வணிகத்தை பெரிய அளவில் கொண்டு செல்ல இன்டெல்லிஸ்மார்ட் சிறந்த உதாரணம். இந்த ஒப்பந்தம் எங்கள் முதலீட்டாளர்களுக்கு நல்ல பலனைத் தந்துள்ளது" என்றார்.

EESL CEO அகிலேஷ் தீட்சித், "மின்சாரத் துறையில் டிஜிட்டல் மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்த மாற்றம் நுகர்வோர் மற்றும் மின் விநியோக நிறுவனங்களுக்கு பெரும் சேவையாக அமையும்" என்று நம்பிக்கை வெளியிட்டார்.

மத்திய அரசு நாடு தழுவிய ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தீவிரமாக ஊக்குவித்து வரும் நிலையில், அதானியின் இந்த அதிரடி நடவடிக்கை மின்சாரத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்திற்கான சட்ட ஆலோசனையை சிரில் அமர்சந்த் மங்கள்தாஸ் நிறுவனமும், விற்பனையாளர்களுக்கு தல்வார் தாகூர் & அசோசியேட்ஸ் நிறுவனமும் வழங்கின. டெலாய்ட் டச் டோஹ்மட்சு இந்தியா விற்பனையாளர்களின் பரிவர்த்தனை ஆலோசகராக செயல்பட்டது.

இந்தக் கையகப்படுத்தல் இந்தியாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஸ்மார்ட் மீட்டர்கள் மூலம் மின் இழப்புகளைக் குறைத்து, நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்தும் இந்த டிஜிட்டல் மாற்றம், நாட்டின் ஆற்றல் திறனை பெரிதும் உயர்த்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+