ஆதார் எண் இருந்தாத்தான் இனி சமையல் கேஸ் சிலிண்டர் கிடைக்குமாம்!
சமையல் கேஸ் சிலிண்டர் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: சமையலுக்கு பயன்படுத்தும் கேஸ் சிலிண்டரை பெற ஆதார் எண் அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் மே மாதம் 31ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை, கேஸ் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.
ஆதார் எண் எனப்படும் தனிமனிதர் அடையாள எண் ஒவ்வொரு இந்தியருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஆதார் எண் அரசின் சலுகைகளைப் பெற அவசியமில்லை என கூறியது.
ஆனால், தற்போது ஏழைக் குழந்தைகள் பள்ளியில் சத்துணவு சாப்பிடுவதற்குக் கூட ஆதார் எண் அவசியம் என்று மக்களை கட்டாயப்'படுத்தி' வருகிறது.
இந்நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரைப் பெறுவதற்கும் ஆதார் எண் அவசியம் என்று கூறியுள்ளது. மேலும், மே மாதம் 31க்குள் ஆதார் எண்ணை கேஸ் பெறும் நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது.
மத்திய அரசு, ஆதார் தொடர்பாக தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அனைவருக்கும் சிரமத்தை உண்டாக்கி வருகிறது.