Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆளுநர் மீது புகார்.. தமிழகம் குறித்து விவாதிக்க லோக்சபாவில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்

ஆளுநர் தாமதத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரி லோக் சபாவில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை அதிமுக எம்பி வேணுகோபால் கொண்டு வந்தார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ள வித்யாசாகர் ராவ், சசிகலா முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க தாமதப்படுத்தி வருகிறார் என்று கூறி நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் அரசியல் சூழல் அசாதாரணமாக உள்ளதால், லோக் சபாவின் துணை சபாநாயகரான தம்பி துரை தலைமையில் அதிமுக எம்பிகள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தொடங்கிய நாடாளுமன்றக் கூட்டத்தின் இரண்டு அவைகளிலும் அதிமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

ADMK MP brings resolution against Governor in Lok Sabha

அப்போது, பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் தாமதம் செய்து வருகிறார் என்று புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக லோக்சபாவில் எம்பி வேணுகோபால் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.

லோக்சபாவில், ஆளுநர் தமிழகத்திற்கு வராமல் கால தாமதப்படுத்துவதற்கும், ஏற்கனவே எம்எல்ஏக்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவரை முதல்வராக ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆளுநர் ஜனநாயக கடமையை ஆற்றவில்லை. எனவே, இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரி இந்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுமா என்பது சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கையில் உள்ளது. அப்படி நடத்தப்பட்டால் மத்திய அரசு அளிக்கும் விளக்கம் என்ன என்பது தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+