கொல்கத்தாவில் கட்டிடங்களுக்கு மமதாவுக்கு பிடித்த கலரில் பெயிண்ட் அடித்தால் சொத்து வரி விலக்கு
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு பிடித்த வெள்ளை, நீள நிற பெயிண்ட் அடித்தால் சொத்து வரி விலக்கு கிடைக்கும்.
மேற்கு வங்க தலைநகரில் உள்ள மேம்பாலங்கள், பாலங்கள் மற்றும் அரசு கட்டிடங்களுக்கு அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜிக்கு பிடித்த வெள்ளை, நீள நிற பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது. அந்த நிறங்கள் நகரின் அழகை அதிகரிக்கும் என்று மமதா நம்புகிறார்.

இந்நிலையில் கொல்கத்தாவின் மேயரான சோவன் சாட்டர்ஜி புதிய திட்டம் ஒன்றை மேயர் கவுன்சில் கூட்டத்தில் அறிமுகப்படுத்தி அதற்கு ஒப்புதலும் கிடைத்துள்ளது. அந்த திட்டம் என்னவென்றால் கொல்கத்தாவில் உள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மமதாவுக்கு பிடித்த நிறங்களான வெள்ளை மற்றும் ஊதா நிற பெயிண்ட் அடித்தால் 2014-2015ம் ஆண்டுக்கான சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்பது தான்.
மேயரின் இந்த திட்டம் குறித்து பொருளாதார நிபுணர் அஜித்தவா ராய் சவுத்ரி கூறுகையில்,
என் வீட்டுக்கு என்ன நிறத்தில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட உரிமை. கொல்கத்தா மாநகராட்சி குறிப்பிட்ட நிற பெயிண்ட்களை வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அடிக்கச் சொல்வது நியாயம் இல்லை. என் வீட்டுக்கு எந்த நிறம் உகந்ததாக இருக்குமோ அந்த நிற பெயிண்ட்டை தான் நான் அடிப்பேன் என்றார்.












Click it and Unblock the Notifications