பெங்களூர் சிறையில் சசிகலாவுடன் வக்கீல்கள் சீராய்வு மனு குறித்து அவசர ஆலோசனை..!
பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை வக்கீல்கள் அசோகன் மற்றும் செந்தில் ஆகியோர் சந்தித்து சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை வக்கீல்கள் சந்தித்து அடுத்தக்கட்ட ஆலோசனைகளை நடத்தினர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா நேற்று மாலை பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவருடன் இளவரசியும் சரணடைந்தார் . பின்னர், அவருக்கு 9234 என்ற கைதி எண்ணும் இளவரசிக்கு 9235 என்ற கைதி எண்ணும் ஒதுக்கப்பட்டு பெண் கைதிகளுக்கான ப்ளாக் எண் 2 அறையில் சசிகலா இளவரசியுடன் சேர்த்து அடைக்கப்பட்டுள்ளார்.

4 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதால், தனிப்பட்ட வாழ்க்கையிலும், கட்சி ரீதியான நடவடிக்கைகள் குறித்து திட்டங்களை வகுக்க காலஅவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் சசிகலா மனு செய்திருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால் வேறுவழியின்றி அவர் சரணடைந்தார்.
இதனையடுத்து, சசிகலாவின் வக்கீல்கள் அசோகன் மற்றும் செந்தில் ஆகியோர் இன்று காலை பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்றனர். அவர்களை சந்தித்த சசிகலா, சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.












Click it and Unblock the Notifications