உரசிக் கொண்ட இரு விமானங்கள் - பெங்களூர் ஏரோஇந்தியா ஷோவில் பரபரப்பு!
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு: பெங்களூரு ஏரோ இந்தியா ஷோவில் இன்று இரு சிறிய ரக விமானங்களின் இறக்கைகள் உரசிக் கொண்டு விபத்துக்குள்ளாகின. இருப்பினும் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

பெங்களூரு எலகங்கா பகுதியில் ஏரோ இந்தியா 2015 கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது. இதில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் விமானங்கள் கலந்து கொண்டு பார்வையாளர்களை வசீகரித்து வருகின்றன.

இந்த நிலையில் இன்று ரெட்புல் விமானங்கள் திடீரென உரசிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவற்றின் இறக்கைகள் உரசிக் கொண்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் பேராபத்து ஏற்படவில்லை. இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications